Saturday, October 16, 2010

அவள் கண்கள்

தடுமாற்றம் 
உன்னிரு விழிகளையே
பார்த்து கொண்டிருக்கிறேன்...
விழுந்த இடத்தை பார்க்காதே 
தடுக்கிய இடத்தை பாரேன 
யாரோ சொல்ல கேட்டதால்!!!!
கண்கள் 
எதைஎதையோ
அழகு 
என்றனர் 
உன் கண்களை 
கண்டும் 
அதை சொல்லாத 
மூடர்கள்!!! 

கூரிய ஆயுதம் ...

உலகில்
குத்தினாலும்
இன்பத்தை
கொடுக்கும்
கூரியஆயுதம்
உன் கண்கள்
மட்டுமே ...

Thursday, October 14, 2010

மிருகக்காட்சி சாலை

மிருக காட்சி
சாலையில்
விலங்குகளை
பார்ப்பது போல் ...
வாயை மிதமாக
திறந்து
விநோதத்தை
கண்ணில் தேக்கி ...

அழகாய் பார்த்து
பிஞ்சு
குழந்தை ..

ஜன்னல் வழியாக
பக்கத்து
பேருந்து பயணிகளை ...


கனவு காதலி ...

தனிமையில் உன் குறும்புகளை
எண்ணி என் உதடுகள் சிரிக்கும் ....
உன் முகத்தை பார்த்த என்
மனம் தன்னையே மறக்கும் ...


உன் விழிகளை கண்ட என்
கண்கள் சிமிட்ட மறுக்கும் ...
நான் நினைப்பதை உன்
இதழ்கள் பேசி முடிக்கும் ...



நீ இல்லாத போது உன்
நினைவு ஏங்க வைக்கும் ...
என் கனவு காதலியே...

எப்போது நீ கனவில்

இருந்து நிஜமாவாய்என எதிர்பார்த்திருக்கிறேன்...


குளிர் காதலன் ...


பட்ட பகலில்
நட்டநடு வீதியில்
சிறிதும் நாணமின்றி

எனை வந்து தழுவினாள்...



கண்டும் காணாமல்
 சாலையோர மரத்தின்
கீழே தஞ்சமடைந்தேன் ...


இடியும் மின்னலுமாய்
கோபத்தை காட்டி
நின்று போனாள்...

என்னை குளிர வைத்த

மழை காதலி ....

கையெழுத்து ...

என்
கையெழுத்தும்
அழகாக
இருக்கிறது
உன் பெயரை
எழுதும்போதுமட்டும் ....